சுவாமிநாதம்44எழுத்ததிகாரம்
 
கூத்தன் - கூத்து என்பது குறிப்பு வினையின் தொழில் பகுதி.

     எட்டு வகையாக ஈரேவல் வரும் என்றது நடப்பி, நடப்பிப்பி, நடத்துவி,
நடத்துவிப்பி, வருவி, வருவிப்பி ; உண்பி, உண்பிப்பி என்பதைக் குறிப்பதாகக்
கொள்ளலாம். இது, வினைப்பகுதியின் தொகையைக் கூறுகின்றது. சொல்லியல் ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகப் பகுதிகளின் தொகுத்துக்கூறுதலும்
கருதப்படுகின்றது.

     ஈரேவலின் விகுதியாக நான்கு மட்டுமே (வி. பி. என்பது தனித்து
வருவதும் இணைந்து வருவதும் ஆக நான்கு - நடப்பி, வருவி, நடப்பிப்பி,
வருவிப்பி) நன்னூலார் கூற இவர் எட்டு வகை கூறுவது புதுமையாக உள்ளது.

     நன்னூல் 137, 138, 132 ஆகிய சூத்திரங்களின் தழுவலே இச்சூத்திரம்.

     பா. வி.: ஈறேவல் (3வதுவரி) என்ற மூலபாடம் ஈரேவல் என்று
கொள்ளப்பட்டுள்ளது.

25. கொண்ட அன், ஆன், அள், ஆள், அர், ஆர், பம், மார்,
                                          அ, ஆ,
     கு, டு, து, று, என், ஏனன ல்லொடு, அம், ஆம், எம்,
                                          ஏம், ஓம்.
கண்ட உம் ஊர் கடதற வை யிய யார் மின் இர் ஈர்
     கயர வொற்றால் ஏல் காணும் பிறவும் வினை விகுதி
பண்டிவற்றிற் சிலவெழுத்து ஈற்றென சொல்லீற்றன வாய்ப்
     பல பெயர்க்காங்; கடதற வொற்றின் னிறப்புங்கிறுகிற்
றெண்டருகின்று ஆநின்று நிகழ்வு பவ்வல் எதிர்வும்
     இடைநிலை பாலிடத் தேற்கும் வினையெலா சிலவே. (3)

விகுதியின் விரி கூறுகின்றது.

     உரை : அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப. மார், அ, ஆ, கு,
டு, து, று, என், ஏன், அன், அல், அம், ஆம், ஓம், கும், டும்; தும், றும், ஐ,
இ, மின், இர், ஈர், க, ய, ர்,