எல்லை : அண்ணாமலைநகரின் கிழக்கு சிதம்பரம். நீக்கம் : அண்ணாமலைநகரின் நீங்கினான். உவமை : பாரியின் நல்லன் வளவன். பெயரியல் 12-ஆம் நூற்பாவில் (45-ஆம் நூற்பா) ஐந்தாம் வேற்றுமை 2-ஆம் வேற்றுமையும் 4-ஆம் வேற்றுமையும் ஏற்று வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீக்கப்பொருளும் உவமைப் பொருளுமே 2-ஆம் வேற்றுமையில் வரும். அண்ணாமலைநகரை நீங்கினான் - நீக்கம் பாரியை விட வளவன் நல்லவன் - உவமை உவமைப் பொருளும் எல்லைப் பொருளும் 4-ஆம் வேற்றுமை உருபு ஏற்று வரும். பாரிக்கு வளவன் நல்லவன் - உவமை அண்ணாமலைநகருக்குக் கிழக்கு சிதம்பரம் - எல்லை ஆறாம் வேற்றுமை அது - அரசனது தொழில் ஆது - தனாது ஊர் அ - நேற்றைய கூட்டம் உடைய - ஆசிரியனுடைய பெருமை தற்கிழமை: சினைத் தற்கிழமை - சாத்தனது கை மரத்தினது கிளை குணம் (பண்பு) - பூவினது வெள்ளை தொழில் - மாலையினது வரவு |