பக்கம் எண் :

பொதுவியலுரை103

திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப்
பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா
ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந்
தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால்.
(110)

இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை - பாடாண். துறை - விளக்கு நிலை.

தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற
முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ--மன்னுயிருண்
கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே
தோற்றுவருங்கொள்ளாத்துணிவு.
(111)

இது கௌடகாந்தம். பகுதி - இயற்கை. துறை - தகையணங் குறுத்தல்.

பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத்
தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு
மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற்
காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே.
(112)

இது பாஞ்சாலகாந்தம். துறை - நாடுவாழ்த்து.

(குருகாமான்மியம்). காந்தம் முற்றும்.

ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு
மூழிக்களத்துறையுமூவர்கோ--னூழிதொறும்
வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை
யுத்தமனேகாக்கவுனை.
(113)

திணை - பாடாண். துறை - புறநிலைவாழ்த்து.

இறையேதிருமால்வீடென்பது மந்தாம
மறையேபனுவலெனவைக்கு--நிறைகூர்
கரையற்றபோதக்கடன்மாறனுண்மை
யுரைகற்றுணர்ந்தாருளம்.
(114)