பக்கம் எண் :

  

இரண்டாவது

பொருளணியிய லுரை.

------

86. பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட்
கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே.

என்பது சூத்திரம். இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும். ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ; பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்? சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று.

(இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால் அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு.

புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம். பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று.

(1)

87. அவற்றுள்,
புவனம்போற்றியபொருளணிபுகலிற்
றவலரும்பான்மைத்தன்மையுவமை
யுருவகமுள்ளுறையொட்டுல்லேக
மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந்
தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய
மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ்
சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை
பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி