பக்கம் எண் :

பாயிரவுரை11

 பலபொருட்கேற்பினல்லவைகோடன்
மொழிந்தபொருளோடொன்றவைத்தன்
மொழிந்தனமென்றன்மொழிவாமென்ற
லிறந்ததுகாத்தலெதிரதுபோற்றன்
மொழியாததனைமுட்டின்றிமுடித்தல்
வந்ததுகொண்டுவாராததுமுடித்தல்
வாராததுகொண்டுவந்ததுமுடித்தல்
பிறன்கோட்கூறறன்கோட்கூறல்
பிறனுடம்பட்டது தானுடம்படுத
லறியாதுடன்படலாணைகூற
றன்குறியிடுதறந்துகொணர்ந்துரைத்தன்
மறுதலைசிதைத்துத்தன்றுணிபுரைத்தன்
மாட்டெறிந்தொழிதலிரட்டுறமொழித
லொன்றினமுடித்தறன்னினமுடித்தன்
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூற
லுய்த்துக்கொண்டுணர்தலினுரனுடையனவாய்த்
தீபகவகையாற்சிறப்புறக்கூறல்
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்தலென்
றமைத்ததினகப்படவமையாதனவுஞ்
சுருங்கக்கூறியதொடர்பினைநாடி
யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே.

(எ-ன்) மேலதிகாரம்பாரித்த பன்னிரண்டினு ளிறுதிநின்ற தந்திரவுத்தியாமாறுணர்-ற்று.

(இ-ள்) உள்ளியதுணர்த்தன் முதலாகச் சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தலீறாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு மத்தன் மையபிறவுந் தந்திரவுத்திகளாம். அவற்றையு மிதனுட்கூறியதாகப் பிறர்க்குணர்த்துத லறிவுடையோர்க்கு முறைமையாமென்றவாறு. தந்திரமெனினு நூலெனினுமொக்கு மென்றவாறு உத்தியென்பது வடமொழிச் சிதைவு. அஃதாவது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடுகாட்டுவது. உள்ளுறு...... யுணர்த்தினென்பது முந்துநூல் செய்த ஆசிரியர் நூற் கின்றியமையாச் சிறப்பென்பதாகக