பக்கம் எண் :

116மாறனலங்காரம்

உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை
பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்--பற்றிலர்பே
ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன்
றானந்தமில்லான்றலம்.
(129)

இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன். இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை - பாடாண்பொதுவியல். துறை - புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் - நித்தியசூரியர்.

ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி
சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா--வாழ்மறையோர்
வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா
நாதனரங்கநகர்.
(130)

இதுவும் இடத்தன்மை. திணை - இதுவுமது. துறை - நகர் வாழ்த்து.

தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர்
யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான்
றொருபெருந்திருமாலுந்தியங்கமலத்
தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று
ளொன்றயனுலகாதியாயவீரேழி
னயனிலைமேருநடுக்கொள்பூலோக
நவகண்டமதாநாவலந்தீவொடு
முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு
மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும்
வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு
மேமபூதலமிடையிடுதிகிரிக்
காமர்மால்வரைகடந்தநள்ளிருளா
யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ்
மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி
ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை
யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான்