உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்--பற்றிலர்பே ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன் றானந்தமில்லான்றலம். | (129) |
இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன். இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை - பாடாண்பொதுவியல். துறை - புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் - நித்தியசூரியர். ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா--வாழ்மறையோர் வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா நாதனரங்கநகர். | (130) |
இதுவும் இடத்தன்மை. திணை - இதுவுமது. துறை - நகர் வாழ்த்து. தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர் யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான் றொருபெருந்திருமாலுந்தியங்கமலத் தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று ளொன்றயனுலகாதியாயவீரேழி னயனிலைமேருநடுக்கொள்பூலோக நவகண்டமதாநாவலந்தீவொடு முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும் வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு மேமபூதலமிடையிடுதிகிரிக் காமர்மால்வரைகடந்தநள்ளிருளா யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ் மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான் |
|