றீதறுபான்மையிற்றெருட்டும் போதமுற்றோங்கியபுராணசித்தமதே. | (131) |
இதுவும் இடத்தன்மை. திணை - இதுவுமது. துறை - பேரண்ட வாழ்த்து. இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் - இருநூற்றொருபத்து நாலு புவனமும். யாவும் யாவரும் - அஃறிணைகளும் உயர்திணைகளும். மேருநடுக்கொள்பூலோகம் - மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம். வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை - கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும் ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை. மண்டுமாழ் புனல் - கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற் கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் - ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க. பா - நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள. நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல் வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே--யத்திகிரிச் செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா மங்கண்ஞாலம்புகழ்காலம். | (132) |
இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு. இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை - பொதுவியல். துறை - பருவவாழ்த்து. (6) தன்மையலங்காரம் முற்றும். ------- 2-வது உவமையலங்காரம் ----- 92. | உவமையின்வகையேயுணருங்காலை வினைபயனுறுப்புருவென்றநான்கினுந் தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங் காதல்சிறப்பேநலன்வலியுடனிழி போதியவைந்துமுறுநிலைக்களனா யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து |
|