பக்கம் எண் :

பொருளணியியலுரை117

றீதறுபான்மையிற்றெருட்டும்
போதமுற்றோங்கியபுராணசித்தமதே.
(131)

இதுவும் இடத்தன்மை. திணை - இதுவுமது. துறை - பேரண்ட வாழ்த்து. இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் - இருநூற்றொருபத்து நாலு புவனமும். யாவும் யாவரும் - அஃறிணைகளும் உயர்திணைகளும். மேருநடுக்கொள்பூலோகம் - மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம். வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை - கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும் ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை. மண்டுமாழ் புனல் - கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற் கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் - ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க. பா - நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள.

நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே--யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம்.
(132)

இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு. இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை - பொதுவியல். துறை - பருவவாழ்த்து.

(6)

தன்மையலங்காரம் முற்றும்.

-------

2-வது உவமையலங்காரம்

-----

92. உவமையின்வகையேயுணருங்காலை
வினைபயனுறுப்புருவென்றநான்கினுந்
தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங்
காதல்சிறப்பேநலன்வலியுடனிழி
போதியவைந்துமுறுநிலைக்களனா
யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு
முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து