பக்கம் எண் :

2பாயிரவுரை

திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.

என்பது பாயிரம் :- எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு. என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும், இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க. இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும்.

1. புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை
பதிகநூன்முகமணிந்துரைபாயிரம்.

(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு.

(1)

2. புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின்
மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த
பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற்
காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின்
மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும்.

(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று.

(இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம் பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு; என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று.

(2)

3. பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே.

(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று,