செய்பவற்றினும்மிகுந்தது மெய்யாதலானும் உதாத்தமேயாம். திணை - வாகைசார்ந்தபுறத்திணை. துறை - செல்வவென்றி. அவற்றொடுமென்னுமும்மை யெச்சவும்மையாதலாற் பிறவற்றோடும் வருவனவு முள. அவற்றுள்ளுஞ் சிலவருமாறு ஆங்கதற்கணியாமாதியாவரணமொன்றினுக் களவில்பேரண்டம் வாங்குபுகவவுபுரிநெடுந்திகிரிவரைகளோர் மருங்கினுக்காற்றா வோங்குபுபிறங்குசிகரகோபுரங்களொருவனீ ராயிரங்கரங்கண் டாங்குபுதூண்டிக்காண்டொறும்வரம்பு தரித்திடற்கரியதன்மையவே. | (576) |
இஃ திடமிகுதி. திணை - பொதுவியல். துறை - புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. (160) 60-வது உதாத்தம் முற்றும். -------- 61-வது ஆசியலங்காரம் -----0----- 246. | வாழ்த்துவதாமேவாழ்த்தெனப்படுமே. |
(எ-ன்) வைத்தமுறையானே வாழ்த்தென்னுமலங்காரம் உணர்-ற்று. வாழ்த்தெனினும் ஆசியெனினும் ஒக்கும். வாழ்த்துவதாமே யெனப் பன்மைப்பாலாகக் கூறியவதனா லவை பலவென்பனவாம். அவை மேற்கூறப்படும். (161) 247. | அதுவே, கடவுள்வாழ்த்தேயறுமுறைவாழ்த்தெனத் திடனுறவருமிருசிறப்பினவாகி யியற்கையினமைதியியன்றமக்களை வாழ்த்துதறானுமரீஇயதொன்றாகும். |
|