பக்கம் எண் :

(பொருளணியியலுரை)365

(எ-ன்) இதுவும் அவ்வாழ்த்தினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) அவ்வாழ்த்தென்னுமது, கடவுள்வாழ்த்தெனவும் அறுமுறை வாழ்த்தெனவும் உண்மையாய்நிகழும் இரண்டுகூற்றவாகி, அவற்றோடுஞ் செயற்கையானன்றி இயற்கையான் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடியென்னும் நான்கும் அமைவெய்திய நன்மக்களை வாழ்த்துதறானும் பொருந்தியதொன்றாகு மென்றவாறு.  

(162)

248. மறையவர்துறவோர்மழைநாடாவுடன்
பொறைபுரியரசெனப்புகலிவையாவு
மமரர்கண்ணெனலாமறுமுறைவாழ்த்தே.

(எ-ன்) வைத்தமுறையானே யறுமுறைவாழ்த்தினது பெயரும் முறையும் தொகையும் உணர்-ற்று.

இதன்பொரு ளுரையிற் கொள்க. இவற்றிற்குச் செய்யுள் வருமாறு:-

பூமாதுநிழன்மணிப்பூண்பொதியவிழ்பொன்னிதழ்ப்புனிதத்
தேமாலைநறுங்களபஞ்செறிமார்பத்திடைமுயங்க
வளப்பரிதாம்பகிரண்டத்தப்புறமுமகத்தடக்கி
யுலப்பிலிளங்கதிருதயத்தொளிகிளர்பேருருவாயும்
நன்னரங்கத்தணுக்கடொறுநயந்தணுவாகியுமெழில்கூர்
தென்னரங்கத்தரவணைமேற்சிறந்திருகண்வளர்ந்துளாய்.

இஃ தாறடித்தரவு.

ஒருசுடராஞ்சொருபமுடனுருவமமைந்தொருசுடரோ
டிருசுடராய்க்குணமொருமூன்றெனலாகிமுறைமுறையே
படைப்பதையுமழிப்பதையும்புறம்போக்கிப்பழிபிறங்கா
திடைப்படுகாவலையெனதென்றெடுத்ததெவனருளுதியே

நின்றனவாயியங்குனவாய்நீடியபல்லுருவமைத்தோன்
பொன்றியநாளெழுந்தபெரும்புனற்படிந்தவுயிர்களைநீ
யெம்மானே திருவுதரத்திருத்தியகாவற்கவற்றாற்
கைம்மாறங்கெவனோநீகைக்கொண்டதருளுதியே

புறம்பயின்றவினைவழிசார்போக்குவரவினும்பிரியா
தறம்புரிவதணுவுளவேலதற்கவற்றையெடுத்தனையா