பக்கம் எண் :

366மாறனலங்காரம்

யுண்ணீர்மையற்றனமாய்ந்துறுநரகிற்புகுவதுறீஇக்
கண்ணீர்கொண்டகன்றகலாக்காவலெவனருளுதியே

இவை மூன்றும் ஒருபொருண்மேன்மூன்றடுக்கி நான்கடித்தாய் இரண்டுவிகற்பத்தால்வந்த தாழிசை.

தரணியுளெவரொடுமுரணியபெருவிற
லிரணியன்வரனெனுமரணறவிகலினை

ஒருபதுசிரமுடனிருபதுகரமுள
நிருதனதுயிர்மிசைபொருகணைசிதறினை

மறையவரிறையவருறைவயின்வடுவுரை
பறைபவனுயிர்புகுமறைகழலிணையினை

முதலையினிடருறுமதமலைமடுவினு
ளுதவுகவெனுமுரையதனொடுமுதவினை

இவைநான்கும் அராகம். என்னை? “உருட்டுவண்ணமராகந் தொடுக்கும்” என்பதனாற் குறிலிணைந் துருட்டிவந்ததுகாண்க.

வஞ்சனையோர்வடிவெடுத்துமாதுலனாமறைபயின்ற
கஞ்சனைக்கொன்றுரகேசன்கடும்பொறையைத்தவிர்த்தனையே

குருகுலத்தார்நூற்றுவரைக்கூற்றுவனாட்டினிலிருத்தித்
தருமன்முதலவர்க்கவனிதனியாளக்கொடுத்தனையே

இவை நாற்சீரீரடி யிரண்டம்போதரங்கம். இவை பேரெண்.

கழிபெருங்கற்பினளாடைகழியாமனயந்தனையே
வழிபடுந்தூதனுமாகிமடக்கோலைசுமந்தனையே
ததிபாண்டன்றனக்கழியாத்தமனியநாடளித்தனையே
விதிகாண்டற்குலப்பில்பலவேடமவைகொண்டனையே

இவை நாற்சீரோரடி நாலம்போதரங்கம். இவை அளவெண். அற்றேல் நாற்சீரீரடியிரண்டம்போதரங்கத்தோ டிதனிடை வேற்றுமை யாதோவெனின் எழுத்துமுதலா வீண்டியவடியிற் குறித்தபொருளை முடியநாட்டல் வேற்றுமையென்றறிக. இந்தநோக்கம் மேல்வரும் இடையெண் சிற்றெண்ணிற்கும் ஒக்கும்.