பக்கம் எண் :

(பொருளணியியலுரை)367

தாடகையுடலுயிர்போக்கினை
தாபதன்மனதிடர்நீக்கினை
நீடகலிகைபழிதீர்த்தனை
நேயமுள்ளவனொடுசேர்த்தனை
வில்லினைமிதிலையில்வளைத்தனை
மெல்லியலிளமுலைதிளைத்தனை
வல்லரவடல்கெடநடித்தனை
மருதினைமுதலொடுமொடித்தனை

இவை முச்சீரோரடியெட்டம்போதரங்கம். இவை யிடையெண்.

உறித்தயிர்கட்டுண்டனையே
உரலிடைகட்டுண்டனையே
மறித்துநிரைகாத்தனையே
வழங்கினையைங்காத்தனையே
குடநடமுன்பாடினையே
குழலினிற்பண்பாடினையே
படர்சகடம்பொடித்தனையே
பகட்டுமருப்பொடித்தனையே
நாவலன்பின்னடந்தனையே
நடித்தனைமென்னடந்தனையே
கோவலரில்லிறுத்தனையே
கோள்விடையேழிறுத்தனையே
புள்ளினைவாயிடந்தனையே
புரந்தனைபாரிடந்தனையே
தெள்ளமிர்தங்கடைந்தனையே
தேவருளங்கடைந்தனையே.

இவைபதினாறும் இருசீரோரடியம்போதரங்கம். இவை சிற்றெண்.

எனவாங்கு, (இது தனிச்சொல். )

இனையதன்மையவாமெண்ணருங்குணத்தி
னினைவருங்காவனிகழ்த்தினையதனா