திதயத்துட்குடிபுகுந்த தன்றலைவர்க்குத் தான்றுய்ப்பதியாதாயினு மவர்க்குச்சேடமாமென்று உண்டியைவெறுத்ததையுங் காரிமாறப்பிரான் குருகாபுரியினுள்ளார் உண்மையென் றுட்கொள்ளா ரென்னுமதுவேயு மன்றியித்துன்பத்திற் கேதுவாயினமென் றுட்கொண்டு தனதுகண்கள் உறங்காது கலுழ்வதனையும் உண்மையென்றுகொள்ளாரென்னுமாதலால் இவள்காதற்சிறப்பிருந்தபடி யென்னென்றவாறு. மாறனூருள்ளாதென்பதனை யிறுதிவிளக்காக்கி யீரிடத்துங்கூட்டுக. எண்ணும்மை யீரிடத்துஞ் செய்யுள்விகாரத்தாற் றொக்கன. காதலும் மாறனூரும் ஆகுபெயர். உச்சிட்டம் - சேடம். இதற்கு இவளது காதற்சிறப்பிருந்தபடி யென்னென்பது சொல்லெச்சமின்றிக் குறிப்பெச்சமாய்ப் பயனிலையாயிற்று. பகுதி - பொருட்பிரிவு. துறை - காதற்சிறப்புரைத்தல். இதனுள் உண்டிவெறுத்ததனையும், கண்கலுழ்வதனையும் மறைத்துக்கூறினமையால் இலேசமும், உள்ளாதென்பது இறுதிவிளக்காகத் தீபகமும், விழிவழியென்பது எது கையலங்காரமும், விழிவழி யிதயத்துட்புக் காரென அற்புதமும், சுவை பெருமையைச்சார்ந்த அழுகையும் ஆகப் பலவணி காண்க. பா - ஒருவிகற்பத்தின்னிசைவெண்பா. காவலர்போற்காவலர்போற்காதங்கமழனந்தை காவலனைக்காவலர்தூஉய்க்காவலெனக்கற்றுணர்ந்தோர் காவலனேகாவலனேகாத்தியெனக்கண்டுற்றுங் காவலகாவென்னார்கலர். | (582) |
அலங்காரம் இதுவுமது. என்னை? காவலர்போற்காவலர்போலெனச் சொற்பின்வருநிலையும், பூரணவுவமையும், காதங்கமழனந்தையெனவே அதிசயமும், பிறர்கட்டோன்றியவறுமைபற்றி அழுகை யென்னுஞ் சுவையும் வந்தமையால் அறிக. திணை - பொதுவியல். துறை - முதுமொழிக்காஞ்சி. பா - ஒருமொழியொருவிகற்பத் தின்னிசை வெண்பா. கோங்கரும்புபோலுங்குவிமுலைகடாம்புயத்து ளாங்கரும்புமுல்லையரும்பேய்க்கும்--பூங்குழற்குச் செவ்வாயும்வெண்ணகையுஞ்செண்பகமாறன்சிலம்பிற் காமர்சுனைக்காவிகண். | (583) |
|