64-வது பாவிகவலங்காரம் -----0----- 251. | விளம்பியகாப்பியக்குணங்கள்பாவிகமே. |
(எ-ன்) வைத்தமுறையானே யிறுதிநின்ற பாவிகமென்னுமலங்காரம் உணர்-ற்று. (இ-ள்) விளம்பியகாப்பியக்குணங்களென்பது முன்னர்ப்பொது வியலுட்கூறிய காப்பியக்குணங்கள். பாவிகமே - ஈற்றில்நின்ற அறுபத்துநாலா மலங்காரமா மென்றவாறு. குணமாவன:அப்பொருட்டொடர்நிலைமுழுவதூஉம் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித் தொருபாட்டாற்கொள்ளப்படாதெனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு “கற்றதனாலாய பயனென்கொல்வாலறிவ னற்றாடொழாஅரெனின்” | (586) |
“சிறப்பொடுபூசனைசெல்லாதுவானம் வறக்குமேல்வானோர்க்குமீண்டு” | (587) |
“ஒழுக்கத்துநீத்தார்பெருமைவிழுப்பத்து வேண்டும்பனுவற்றுணிவு” | (588) |
“சிறப்பீனுஞ்செல்வமுமீனுமறத்தினூஉங் காக்கமெவனோவுயிர்க்கு” | (589) |
“இல்வாழ்வானென்பானியல்புடையமூவர்க்கு நல்லாற்றினின்றதுணை” | (590) |
“சிறைகாக்குங்காப்பெவன்செய்யுமகளிர் நிறைகாக்குங்காப்பேதலை” | (591) |
“பெறுமவற்றுள்யாமறிவதில்லையறிவறிந்த மக்கட்பேறல்லபிற” | (592) |
“என்பிலதனைவெயில்போலக்காயுமே யன்பிலதனையறம்” | (593) |
|