“வேண்டாமையன்னவிழுச்செல்வமீண்டில்லை யாண்டுமஃதொப்பதில்” | (622) |
“நுண்ணியநூல்பலகற்பினுமற்றுந்தன் னுண்மையறிவேமிகும்” | (623) |
என்பனவும், இவைபோல்வனவாகிய பொருட்பால் காமத்துப்பால்களுள் வருங் குணங்களும், பிறகாப்பியங்களுள்வருங் குணங்களும், காப்பியக் குணங்களாமென்றுகொள்க. (166) 64-வது பாவிகம் முற்றும். --------- பொருளணியியல் ஒருவகையான் முடிந்தது. (கவிராசகேசரியான *பேரைக் காரிரத்தினகவிராயர் உரையெழுதினதென் றறிக. ) தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற் குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே கருகாதசெஞ்சொலுரைவிரித்தரன்கற்பகாடவிபோல் வருகாரிரத்நகவிராயன்பேரைவரோதயனே. |
*‘பெரியரத்தினகவிராயர்’ என்பது பிரதிபேதம். |