பக்கம் எண் :

  

ஸ்ரீ:

மூன்றாவது

சொல்லணியியலுரை

---0----

மடக்கு

252. குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி
மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே.

என்பது சூத்திரம். இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து. அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு. புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க 

(1)

253. அதுவே,
தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு
மடைவினிலிருமையுமமைவனவாகியு
நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே.

(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு.

எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க.

(2)