பக்கம் எண் :

378மாறனலங்காரம்

254. ஒன்றாதியவாவொருநான்களவுஞ்
சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே.

(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று.

(இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு.

ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும்.

(3)

255. முதலிடைகடையேமுதலொடிடைகடை
யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே.

(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்--ற்று.

(இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும், இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது.

(4)

256. அவற்றுள்,
அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும்.
(5)

257. இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. (6)

258. உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே.

(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப் பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறுஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு.