பக்கம் எண் :

384மாறனலங்காரம்

(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகியசிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும், ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளேபொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு.

மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ - கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத்தீபகமாக்கியும், மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும், மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி - உறையூர். திணை - பாடாண். துறை - கடவுள் வாழ்த்து.

சலராசிமண்மேற்றவறிழையாஞான
மிலராயிலராயினுமா--மலரா
னனத்தானனத்தானருட்குருகூர்மாற
னெனத்தானணுகாதிடர்.
(633)

இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) தவறிழையாஞானம் - தீங்கினைப்பயவா வுண்மைஞானம். இலராயிலராயினுமா மென்பது - ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு. உம்மை - இழிவுசிறப்பும்மை. மலரானனத்தானனத்தா னென்பது - தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான்அன்னவாகனத்தையுடையா னென்றவாறு. அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறினவரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை - இதுவுமது.

மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத்
தாசரதிதாசரதிதன்னாமந்--தேசுபெறப்
பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ
வீடாதவீடாதன்மேல்.
(634)

இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு.