எதிரேற்றின்பொருள்:- மாகமாரவாம் - துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார - நற்குணத்தையுடையவனே ! மேகமாக - மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா - சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே ! நாரணா - நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் - நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா - எம்மைக் காப்பாயாக வென்றவாறு. இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை - கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது. (39) பிறிதுபடுபாட்டு 291. | பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே. |
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று. (இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு. பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந் தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா யாரியனேயாரணத்தந்தியனேவாரி வாரியுணாகணைமன்னா. | (797) |
இது பிறிதுபடுபாட்டு. இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க. தார் - பூ. ஆரியன் - பரமாசாரியன். வாரி - கடல். வாரி - மிகுதி. (40) சருப்பதோபத்திரம் 292. | இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந் தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச் சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம். |
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று. |