பக்கம் எண் :

492மாறனலங்காரம்

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா.
(799)

இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா - சுவாமியே ! என்மனத்திலுள்ளானே ! தூயதாருளா ணீதா னாவா - பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக. அதுவுமின்றி, சீராமனாமனா - சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் - அழகுடையவனே!  ஆதரவிராமா - சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா - போதத்திலுள்ளானே ! வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ - உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு. துறை - இரண்டுங் கடவுள்வாழ்த்து.

(42)

கோமூத்திரி

294. கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.

(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா.
(800)

இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டுகொள்க.