பக்கம் எண் :

500மாறனலங்காரம்

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி--நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து.
(805)

இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது, ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது :  ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள், அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது. அவ்வாறு இதனுள் வந்ததாவது :-  எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்


*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும் இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன. அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
 மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே”
(49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
 மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே”
(50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
 லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்”
(51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
 றான்றபொருள்பிறவாந்திரிபதாதி”
(52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
 சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய”
(53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
 கருதுகிற்கடகபெந்தமாகும்”
(54)

என்பனவாம்.