பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)503

தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர். திணை - வாகை. துறை - அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே--நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.
(811)

இது கடகபெந்தம். நெடுவீடு - பரமபதம். திணை - பாடாண். துறை - கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா--தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.
(812)

இதுவும் கடகபெந்தம். ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க. திணை -...... துறை - சமயவணக்கம்.

(48)

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

-------

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.