நான்காவது எச்சவியலுரை -------- 300. | மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச் சந்திவழுவொடுசெய்யுள்வழுவென வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே. |
என்பது சூத்திரம். இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து, ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப் பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று. (இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு. வழி - இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று. அவையெல்லாம் மேற்காட்டுதும். (1) 301. | அவற்றுள், பழியறவொருபொருண்மொழிபரியாய மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல். |
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று. (இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒருபொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.
* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை - கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது. |