இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென “லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான், ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று. (16) 316. | ஐயெனுருபுதொகினஃதியல்பாம். |
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று. (இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு. அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு மஞ்சனையசெவ்விமழைவண்ணன்--கஞ்சமலர்த் தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத் தோள்கண்டாரென்படார்சொல். | (828) |
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்” என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை - பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை.... (17) 317. | பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப. |
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று. (இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு. முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ் மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற் கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந் தாடவர்க்குவேள்போன்றணித்து. | (829) |
|