எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று. தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று. மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரியமுதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று. (22) 322. | சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர் |
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று. (இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு. அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது : கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது : ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது. உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர் புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க் கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத் தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப் போர்வேலவர்தாம்போமுனங்குறித்த கார்காலத்தினிற்கார்வருமாலையிற் குயிற்குலங்காமாகூகூவெனுநிலை வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப் புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா யிரவலர்தாமரையேமநன்மலரே |
|