பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும் யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங் காவகத்திஃதொருகவினிலைக்களனென் றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக் கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும் புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத் தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி யொளியுமூறுமுரிசையும்வாசமுங் களியதாய்மிழற்றோசையுமைம்பொறி யேககாலத்திலவிதழொன்றினுண் டாகயாவருமணுகாதமைநலன் வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித் தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித் திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும் விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி னேந்தெழிற்சினைகவியெழினியுள் வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே. | (1) |
என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்! இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்! எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்; அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது. (இ-ள்) பொன்னகர்......... உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்தபின்னர்ப் பொன்மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந் தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்; அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்; அருள்புரிகடவுளாணையின்...... தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச்செய்யும் பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும் |