பக்கம் எண் :

62மாறனலங்காரம்

செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும் நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு.

வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :-

நினைமருவொன்றில்லாஞானாதிகளைப்
புனைவகுளத்தாமப்புயனை--வினையினையே
வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின்
சென்றானேநாதனெனத்தேர்ந்து,
(7)
 
வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப்
போதந்தழைந்துபுகழ்புண்ணியனை--நாதமுனி
போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே
தேற்றம்பயின்றேதினம்.
(8)

இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம். உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.

குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக்
குன்றமதனைக்குணக்கடலைக்--குன்றமதே
மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு
மத்தானைத்தேவாய்மதித்து,
(9)

வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச்
சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்--கீர்த்திபுனை
பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற
நாவேமனத்தானயந்து.
(10)

இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம். வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை - பாடாண் ; துறை - ஓம்படை.