பக்கம் எண் :

பாயிரவுரை9

 துறுப்புடனிருதிறத்துரையிடனாகமெய்ந்
நிறுத்தியதொன்றெனநிகழ்த்துதல்விருத்தி.

(எ-ன்) முறையானேவிருத்தியாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவனாற்கூறக்கருதிய பொருளினைக் கூறுதற்குப் பொருந்திய சூத்திரத்துட் சொல்லோடும் பொருளன்றி யெஞ்சிநின்றவற்றையு மிவ்விடத்திற் கிஃதின்றியமையாதென்பனவற்றையு மவ்விடத்திற் கொணர்ந்து பொருத்திச் சொல்லப்பட்ட காண்டிகையுறுப்பாகியவைந் தோடுங்கூட்டி யதற்குத் தன்னூலிடனாகவும், பிறநூலிடனாகவுமுண்மை நிலைநிறுத்தப்படுவதொன்றாய் நடத்துதல் விருத்தியாமென்றவாறு. உறுப்பைந்தாவன. கருத்துமுதல் விடையீறாகக் கூறியவைந் தென்றறிக. இருதிறத்துரையிடனாகவென்பது தன்னூல் பிறநூலென்னுமிரண்டிடனாகவென்றறிக.

(22)

23. பொருளிலகூறன்மருணிலைத்தாத
லின்னாச்சொற்பெறல்வெளிறுபட்டிழிதன்
மொழிந்ததைமொழி தன்முரண்கொளமொழிதல்
குறைபடக்கூறன்மிகைபடவிளம்பல்
சந்தவின்பந்தழுவுதலின்மை
யெதிர்மறுத்துணர்த்தலென்றிவையுளப்படக்
கூறினரீரைங்குற்றநூற்கே.

(எ-ன்) மேலதிகாரப்பட்ட முறையே யீரைங் குற்றமுமுணர்-ற்று.

(இ-ள்) பொருளிலகூறலென்பது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக்கொப்பின்றிப் பயனில்லாதனகூறல். மருணிலைத்தாத லென்பது கேட்போர்க்குப் பொருள்விளங்காமன் மருளுதற்கிடனாதல். இன்னாச்சொற் பெறலென்பது கேட்போர்க்கின்னா யாப்பிற்றாயிருத்தல். வெளிறுபட்டிழித லென்பது குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல். மொழிந்ததை மொழிதலென்பது ஒருகாற்கூறியதனைப் பின்னுங் கூறல். முரண்கொள மொழிதலென்பது முதலே கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்னர்க்கூறல் குறைபடக்கூறலென்பது முதலே யதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல். மிகைபடவிளம்ப