பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி - நடுங்கநாடல் ; துறையுமது. இது பகுதி - உடன் போக்கு. துறை - பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு. மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர் துறைபொருநைவெற்பூர்துடரி--யுறைகுருகை யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா பஞ்சகலியாணன்பரி. | (91) |
என்பது, வழுதிவளநாடர் துறை - பொருநை ; வெற்பும் ஊரும் - துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ; பரி - பஞ்சகலியாணன் ; மா - வெள்ளானை ; ஆணை - சீபராங்குசம் ; கொடி - அன்னம் ; தாமம் - மகிழ் ; முரசு வேதம் என்றவாறு. இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் - நிரனிறை. பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ் சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை - தசாங்கவாழ்த்து. மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந் திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம். | (92) |
தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங் குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான். | (93) |
|