பக்கம் எண் :

94மாறனலங்காரம்

இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும். துறை - செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும்.

விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச்
சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன்
வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய்
மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே.
(94)

இது வைதருப்பச்சமனிலை. துறை - கிளவிவேட்டல்.

பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற்
குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற்
றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த்
தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே.
(95)

இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க. தனித்துறற்கு - கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் - என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும். கதிர்வேலவன் - ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே - தாழ்ந்தகுழலினையுடையாய். யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி - ஆகுபெயர். பகுதி - இரவிற்குறி. துறை - இரவுவரவுணர்த்தல்.

இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய்
வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே
னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங்
கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே.
(96)

இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி - இயற்கை. துறை - இட மணித்துக்கூறி வற்புறுத்தல். இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும்.