பக்கம் எண் :

8. கூளி கூறியது 57

 

 

358.

சித்த மெவையுந் தனைப்போலத்
      தெருமந் திருள வருங்கங்குல்
மத்த யானை மேற்கொண்டால்
      வாகை புனைவார் மானிடரே.

(91)
   

359.

தரங்க வுததி யெனவிண்ணிற்
      றாவுஞ் செவ்வாய்ப் பசுங்கிள்ளைத்
துரங்க மேறி யுகைக்குங்காற்
      றோலார் ஞான நூலாரே.

(92)
  

360.

பொன்னிற் குலவு மோரிரண்டு
      பொருப்பு விருப்பி னுடன்பரித்து
மின்னிற் குலவு மென்படைக்கு
      மெலியா தெவரே வலியாரே.

(93)
   

361.

மேவுந் தேமா மலர்க்காவின்
      விரைத்தா தாடித் தளிர்கொழுதிக்
கூவுங் குயிற்கா களவொலியாற்
      குழையார் மற்றெவ் வுழையாரே.

(94)
   

362.

ஓவா விரவா மும்மதத்த
      உபய வயக்கோட் டொருத்தலின்மேற்
றாவா மதிவெண் குடைகண்டாற்
      றாங்கி நிற்பா ரீங்காரே.

(95)
   

363.

காவி லன்றி லிருந்திரங்கக்
      கழுநீர் மலர்ந்த கழிக்கானற்
றாவில் கடற்பே ரிகை முழங்கிற்
      றரிப்பார் துறவு பரிப்பாரே.

(96)
 

வேறு

 

364.

பொருப்புச்சிலை யேமுதல் புன்சிலையென்
கருப்புச்சிலை யின்வலி காட்டுவதே.

(97)
   

365.

எந்நாணுள நாள்பல வெத்துணையும்
என்னாணுள பூவிடை யேறுவதே.

(98)

359. தரங்க உததி - அலைகளையுடைய கடல்.

360. பரித்து - தாங்கி. படை யென்றது பெண்களை.

361. ஒருத்தல் - யானை. தாங்கி - தடுத்து.

364. பொருப்புச் சிலை - மேருமலையாகிய வில்.

365. பி - ம். ‘என்னாணுள நாள்பல’