பக்கம் எண் :

8. கூளி கூறியது 59

 

தாவின்மயல் கொண்டுவிழு மானிடர் தமக்கே
      சமர்க்குடைவ னேலினிய தென்சமர் தரைப்பால்.

(106)

 

வேறு

 

374.

மறந்தவர்க ளல்லர்மட மாதரை மனத்திற்
றுறந்தவர்கள் போல்வரவர் சொல்லுமொரு சொல்லோ.

(107)
   

375.

கனவின்மட மாதரியல் கண்டுருகு வாரே
நனவினவ ரியல்கரண நசைபெருக லாரோ.

(108)
  

376.

வள்ளவள வுள்ளமுலை வஞ்சியிடை நல்லார்
உள்ளளவு மிங்கெனையு டைப்பவரு முண்டோ.

(109)
 

வேறு

 

377.

கண்வலைப் பட்ட மீனம் பிழைத்தலு மொருகாற் காண்டும்
பெண்வலைப் பட்ட மாந்தர் பிழைத்ததுண் டாகிற் பேசும்.

(110)
   

378.

புணர்முலைத் துரகம் பூட்டிப் புருவவில் லுருவக் கோலி
உணர்வற வல்குற் பொற்றே ரூர்வரேல் யாவ ருய்வார்.

(111)
 

வேறு

 

379.

தொடுப்பனவு மைங்கணையே தொல்லுலக மொருமூன்றும்
படுப்பனவு மவைகொண்டே பராசயமு மெனக்கின்றே.

(112)
 

வேறு

 

380.

ஓருருவை யீருருவா யுடைக்கின்ற துலகம்பே
ஈருருவை யோருருவா யிசைக்கின்ற தெனதம்பே.

(113)
   

381.

பூவாளி யீதென்பார் பொருளறியார் பொருளறிவார்
பூவாளி யீதென்பார் பொருவாளி யைந்தையுமே.

(114)
 

கோபன் கூற்று.

 
 

வேறு

 

382.

என்று காம னிகலேற் றிருத்தலும்
துன்று கோபன் றொழுதிது சொல்லுவான்.

(115)

373. சேவின் மணி - காளையின் கழுத்திற் கட்டப்படும் மணி.

377. கண் என்றது வலையின் இடை வெளியை.

379. பராசயம் - தோல்வி.

380. 52-ம் தாழிசையைப் பார்க்க.