402. | எனையெதிர்ந்தான் கேடுநில மிலக்காக வெடு்த்தங்கை தனையெறிந்தான் கரமுலகிற் றப்புகினுந் தப்பாதால். | (135) | | | உலோபன் கூற்று | | | | வேறு | | 403. | கோப னின்னதன் கொற்றம் புகலலும் லோபன் வென்றி நுவலத் தொடங்குவான். | (136) | | | | 404. | மலையோடி மிசையேற மலைவிப்பன் மற்றும் அலையோடி வசையேற வலைவிப்பன் யானே. | (137) | | | | | 405. | மிகுபார சுமைகொண்டு வேசரிக ளொப்ப உகுபார வழிசெல்ல வுலைவிப்பன் யானே. | (138) | | | வேறு | | 406. | தாயுண்டோ தாதையுண்டோ தாரமுண்டோ தான்பயந்த சேயுண்டோ தானுண்டோ வெனைச்சேருந் திருவிலிக்கே. | (139) | | | | | 407. | உடையுண்டோ வயிறார வுண்டியுண்டோ கனவினுமோர் கொடையுண்டோ குருவுண்டோ வெனையெதிருங் குணமிலிக்கே. | (140) | | | | | 408. | பாரோடு விண்வரினும் பற்றுள்ள முற்றுள்ளார்க் காரோடு முறவுண்டோ வருளுண்டோ வவர்தமக்கே. | (141) | | | | | 409. | காடில்லை யரணில்லை கடலில்லை மலையில்லை பீடில்லை நானுளனேற் பெருமிதமு மின்றேயால். | (142) | | | | | 410. | தாயினைவிற் றமைவர்கொண்ட தாரமும்விற் றமைவர்பெற்ற சேயினைவிற் றமைவர்நான் சேர்ந்தமையு மமையத்தால். | (143) |
402. எதிர்ந்தான் - ஏற்றுக் கொண்டவன். “சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று” குறள். 307. 404. “அடலோப னெழிலேவ ரமைவார்க ளடையக், கடலோடு மலையோடு தடுமாறல் காணே” (அஞ்ஞ. ) , “தங்குபுவி மாந்தரெவர் தாமுமுணர்வின்றிப், பொங்கிரவு நண்பகலொர் போதுமொழி யாதே, அங்கடவி நாடுமலை யாழ்கட லிவற்றோ, டெங்குமுலை கின்றதுமெ னிச்சையிய லன்றோ பிரபோத. காமனாதியா. 37. 405. பி - ம். ‘வேசரிக்கொப்ப’ 408. “பேரோத நேரான பேராசை கூர்போ, தாரோடு முண்டோ வொரன்பென்ப தங்கே” அஞ்ஞ. |