411. | கீர்த்திதனை யகற்றுவார் கிளர்பழிக்கு நாணுறார் ஆர்த்திதனை யகற்றுவார் நானகலா தமைவேனேல் | (144) | | | | 412. | துறந்தார்க்கு மாதுலர்க்குந் தொடர்பின்றித் தன்பால்வந் திறந்தார்க்குங் களைகண்ணா வெய்துவரோ யானெய்தின். | (145) | | | | | 413. | ஓதுதொழி னிலையவர்க்கு முயர்கான நிலையவர்க்கும் ஏதுதொழி லெனமதிக்கு மிடர்களைய விசைவேனோ. | (146) | | | | 414. | தென்புலத்தா ரொடுதெய்வம் விருந்தொக்க றானென்ற ஐம்புலத்தா றோம்புதலங் கடைவாரோ யானடையின். | (147) | | | | | 415. | பார்த்தனையிங் கிவர்க்கொக்கும் படைக்கென்று பகர்வதுமோர் சாத்தனையிந் திரனென்று சாற்றலுமென் சமற்காரம். | (148) | | | | | 416. | மாலென்று முருகனென்றும் வறியவராம் பறவைக்கோர் ஆலென்றும் புகழ்வதுமென் னாணையினா லாமன்றே. | (149) | | | | | 417. | நவநிதிக்கு மிறையவனை நட்புற்றும் நானேவ அவனிதிக்கு முடியவுழந் தரனுமைய மெடுத்தனனால். | (150) | | | | | 418. | வாமனனாய் மாவலிபால் மண்ணிரந்து மால்பின்னர் வாமனனாய் முழுதெய்த வளர்ந்ததுமென் வலியாமால். | (151) | | | | | 419. | பொன்னுலகு புரந்தருளும் புரந்தரனு மங்கர்கோன் தன்னுலகு புகுந்திரப்பப் பணித்ததுமென் சதுராமால். | (152) |
411. ஆர்த்தி - துன்பம். அகற்றுவார் - பெருகச் செய்வார். 412. “துறந்தார்க்குந் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும், இல்வாழ்வானென்பான் துணை” குறள். 42. 414. “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத் றோம்ப றலை” குறள். 43. 415. பார்த்தனை - அருச்சுனனை ; “மிடுக்கிலாதனை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று....... கூறினுங்கொடுப் பாரிலை” தே. சுந்தர. சாத்தனை இந்திரனுக்கு ஒப்பாகச் சொல்லுதல் இறப்ப உயர்ந்த ஆனந்த வுவமையாகும் ; யா. கா. ஒழிபு. சூ. 9, உரை. சமற்காரம் - சாதுரியம். 417. இறையவன் - குபேரன். அவனிதிக்கு முடிய - அவனியிலுள்ள திசைகள் முழுவதும். 418. வாம் மனனாய் முழுது எய்த - தாவுகின்ற மனத்தையுடைய வனாகி மூன்றடி முழுமையையும் அடைய. 417 - 8 “ஆலஞ்சேர் மிடற்றானு மையத்திற் குழந்திலனோ, மாலும் போய் மாவலிபான் மண்வேண்டி நின்றிலனோ” (அஞ்ஞ), “பலியீசனு மெடுத்தான், மாவலியை மூவடிமண் மாயனுமிரந்தான்” பிரபோத. காமனாதியர். 36. 419. அங்கர்கோன் - கன்னன். உலகு - தேயம். |