பக்கம் எண் :

64 பாசவதைப் பரணி

420.

நொய்தாய நீர்தனிலும் நுண்ணியது நெய்யதிலும்
வெய்தாய புகையதிலு மெலிவர்நான் வெகுண்டக்கால்.

(153)
 

 

 

421.

ஈயீட்டு மதுவென்ன விருநிதிக ளெத்திசையும்
போயீட்டு மதுவன்றிப் புசிக்கநான் பொருந்தேனால்.

(154)
  

422.

சொல்லாத பொய்யுளதோ தொடர்ந்தனனே லுலகாளும்
சல்லாபம் பெறவன்றோ தருமனும்பொய் சாற்றியதால்..

(155)
   

423.

கவிகையெடுத் தயலொருவன் கடும்பரிப்பின் கறங்குவராற்
சிவிகையெடுத் தயலொருவன் சேவடியும் வருடுவரால்

(156)
 

மோகன் கூற்று.

 
 

வேறு

 

424.

உலம்பியின்ன வண்ணமங்கு லோபனின் றுரைத்தலும்
வலம்படுந் திறத்துமோகன் வாய்திறந்து கூறுவான்.

(157)
   

425.

ஈசனாம மில்லையாக வென்னையொப்ப யாவனே
நேசனாகி யெங்குமாய் நிறைந்துநிற்க வல்லனே.

(158)
   

426.

நாடநாட வென்னையோர்ந்து நல்லநல்லவென்று மேல்
ஓடவோட வவதியின்றி யோடவல்லன் யாவனே.

(159)
   

427.

நிலையில்வாழ்வு கானனீரி னீரதென்ன யாவர்தாம்
உலைவிலாம லுள்ளகாறு முணரவல்ல ருரைமினே.

(160)
  

428.

சத்தைமித்தை யாகவேறு தலைமயக்கி நிலையிலா
மித்தைசத்தை யாகவே விளைப்பதேயென் விசயமால்.

(161)
  

429.

பெருவிருப்ப மன்றியே பிடித்துநா னலைப்புழி
அருவருப்பு முண்டுபோலு மங்கியொத்த வர்க்குமே.

(162)

420. “நீரினு நுண்ணிது நெய்யென்பர்” (நாலடி) என்ற செய்யுளைப் பின் பற்றி வந்தது.

421. “உடாஅது முண்ணாதும்” (நாலடியார்) என்ற செய்யுளைப்பின் பற்றி வந்தது.

422. “உரையாத பொய்யுண்டோ வுலோபனே யுற்றக்கால், தரை யாளும் பொருட்டன்றோ தருமனும்பொய் சாற்றினனே” அஞ்ஞ.

423. பரிப்பின் - குதிரைக்குப் பின்னே.

424. உலம்பி - முழங்கி.

425. “ஈசனொளி யோரிடத்து நிகழா வண்ண மெவ்வுருவுந் தன்னுருவா யெங்குந்தானாம், ஆசையவன்” அஞ்ஞ.

பி - ம். ‘என்னை யொத்து’.

427. நீரின் நீரது - நீரினது தன்மையை உடையது.

429. அங்கி - நெருப்பு. ஒத்தவர் - தூய்மையை உடையவர் ;  என்றது ஞானிகளை.