பக்கம் எண் :

8. கூளி கூறியது 65

430.

துக்கமீது சுகமெனச் சுத்தவெட்ட வெளியிலே
எக்கியாரும் வீழநா னிந்த்ரசாலம் வல்லனே.

(163)

 

  

431.

பழுதைசீறு மரவெனப் பதறியோடி யஞ்சிவீழ்ந்
திழுதையாய் மருங்கொடிந் திடவியற்ற வல்லனே.

(164)
   

432.

மலத்தின்வீழ்ந்து சூகரம் வாய்மடுப்ப மற்றதும்
நலத்ததாக வாக்குவே னானலாமல் யாவனே.

(165)
  

433.

நரம்பெலும்பு தோல்வழும்பு நாறுமூளை பீளையாம்
வரம்பிலூனை மாதராய் மயக்குவிக்க வல்லனே.

(166)
 

அகங்காரன் கூற்று

 

434.

என்றுகூறி மோகனங் கிருத்தலு மெனக்கெதிர்
ஒன்றுமில்லை யென்றகங் காரனின் றுரைப்பனால்.

(167)
 

வேறு

 

435.

வம்சமதிற் பெரியேன் வடிவதனிற் பெரியேன்
      வாழ்வுமிகப் பெரியேன் வாய்மைதனிற் பெரியேன்
அம்சமதிற் பெரியே னாண்மைதனிற் பெரியேன்
      ஆரெனையொப் பவரெனா வமைபவன்யா னலனோ.

(168)
   

436.

சோதிமிகப் பெரியேன் றொல்புசழிற் பெரியேன்
      சுற்றமதிற் பெரியேன் கொற்றமதிற் பெரியேன்
ஓதிமிகப் பெரியே னுண்மைதனிற் பெரியேன்
      ஒப்பவர்யா வரெனா வுயர்பவன்யா னலனோ.

(169)
   

437.

கேள்விதனிற் பெரியேன் கேதமதிற் சிறியேன்
      கேழ்மைதனிற் பெரியேன் கீழ்மைதனிற் சிறியேன்
வேள்விதனிற் பெரியேன் வீணதனிற் சிறியேன்
      மிக்கவர்யா வரெனா விழைபவன்யா னலனோ.

(170)
   

438.

தானமதிற் பெரியே னூனமதிற் சிறியேன்
      தவமதனிற் பெரியே னவமதனிற் சிறியேன்
மானமதிற் பெரியே னீனமதிற் சிறியேன்
      மற்றெவரொப் பவரெனா மலைபவன்யா னலனோ.

(171)

433. பி - ம். ‘பூளையாம்’.

435. வம்சமதிற் பெரியேன் :  “உங்களினெண் மடியான் வம்சமதிற் பெரியேன்” அஞ்ஞ.

436. ஓதி - ஞானம்

437. கேதம் - துயர்.