பக்கம் எண் :

66 பாசவதைப் பரணி

 

வேறு

 

439.

உங்களினு மெண்மடங்கு பதின்மடங்கு நாமுயர
      உயர்ந்தோ மென்னாத்
தங்களிற்றா மிகல்புரியப் புரிவதன்றோ வெனதுபெருந்
      தலைமை யாதல்.

(172)
 

 

440.

நீயடா வெனக்கொப்பாய் நில்லடா நில்லென்று
      நிறுத்திப் பின்னர்
வாயெடா வகைபுரிந்து மதர்ப்பதன்றோ வெனதரச
      வாகை யாதல்.

(173)
  

441.

தானேநான் மறையோதுஞ் சதுமுகன்மா லவனெனக்குத்
      தரமோ வொப்பான்
நானேநா னெனவுயரு நல்லாண்மை பெரிதுடையேன்
      நானே யாமால்.

(174)
   

442.

மாறாகத் துறக்கமொன்று மறுக்கமற வகுப்பனென
      மதித்துப் போந்து
வேறாகப் படைத்தவனு மென்னேவல் பிழையாமல்
      விளைத்தோ னாமால்.

(175)
 

மற்சரன் கூற்று

 
 

வேறு

 

443.

நம்மத முற்று மிம்முறை யென்ன
      நாட்டி மதத்த னீட்டி யுரைப்ப
விம்மித முற்றுத் தம்முறை முற்றும்
      விற்சர நேரு மற்சர னோதும்.

(176)
 

வேறு

 

444.

இம்மையினும் விபவங்க ளெத்துணையுங் கெடுத்தென்னை
      எதிர்ந்தான் றன்னை
அம்மையினு நிரயத்தி னழுத்திலனே லெனையழுக்கா
      றலனென் பீரால்.

(177)

442. படைத்தவன் - விசுவாமித்திர முனிவர்.

444. விபவங்கள் - ஆக்கங்கள். எதிர்ந்தான் - ஏற்றுக்கொண்டவன். அம்மை - மறுமை. “அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்” குறள். 168.