445. | கொடுப்பதனைக் கொடாதவகை கோட்டிவிய வெனையெதிரிற் குபேர னேனும் உடுப்பதுவு முண்பதுவு மின்றாகக் கிளையினொடும் ஒறுப்ப னேயால். | (178) | | | | 446. | பண்போய குறளுருவாய்ப் படியிரக்கு மொருவனுக்குப் பழுதொன் றாற்றிக் கண்போய வவனன்றிக் கண்ணுடைய நீருமென்போர் காணீர் போலும். | (179) | | | | | 447. | அறிவினோ டுருவாக்கம் யார்மாட்டுக் கண்டிடினும் அவைபொ றாது செறிவினோ டறச்சீறிப் புழுங்குவதன் றோவெனது செய்கை யாதல். | (180) | | | துன்மதி கூற்று | 448. | அழுக்காற்றா னிவ்வண்ண மறைந்தமைய விவையனைத்தும் அறையக் கேளா இழுக்காற்றா னிறைவனொடு துன்மதிமந் திரியிவ்வா றியம்பு வானால். | (181) | | | | | 449. | ஞானமே தன்மவித்த காமமெனு மொருநான்கும் நந்த நந்தும் ஊனமே லொன்றுமிலா நம்படையி னூக்கமெவர் உரைக்க வல்லார். | (182) |
445. வியவு - ஏவுகின்ற ; “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்ப தூஉம், உண்பதூஉ மின்றிக் கெடும்.” குறள், 166. பி - ம். ‘கொட்டிவிய. ’ 446. குறளுரு - வாமனாவதாரம். கண்போய அவன் - சுக்கிராச் சாரியார். 447. “அன்னியற் கறிவுரு வாக்கங் கண்டுகே, டுன்னியுட் பொறாமையா முருவி னேனுடன், தன்னிலுட் புழுங்குமத் தன்மை யேவடி, வென்னுமென் னசூயையை யாவர் வெல்வரே.” பிரபோத. காமனாதியர் வீரலாபச். 64. 449. வித்தம் - பொருள். “ஞான மாசில் தன்மவித்த காமநாம சாலையும், ஈனமாக்கு நம்படைக்கொ ரெல்லைசொல்வ தெங்ஙனே.” அஞ்ஞ. |