பக்கம் எண் :

74 பாசவதைப் பரணி

484.

பாசிபற்றிய புரையைமென்குமிழ்
      பகரினொக்கும தென்பரே
வேசிபற்றிய பொழுதுமால்வழி
      விட்டசிந்தையின் மெலிவரே.

(217)
   

485.

கோழையூறிய வாய்விளிம்பொரு
      கொவ்வையென்று குறிப்பரே
ஏழைமானிட ராயினார்சிலர்
      இருமைதானு மிழப்பரே.

(218)
  

486.

வெய்யபல்லெனும் வெள்ளெலும்பினை
      மெல்லென்முல்லை யரும்பொடு
துய்யநித்தில மொக்குமென்றணி
      சொல்லுவார்சில சுமடரே..

(219)
   

487.

ஊத்தையாகிய வாயையாம்பலை
      ஒக்குமென்ன வுரைப்பரே
சீத்தையாகிய வேண்மலர்க்கணை
      சிந்தைநொந்து திகைப்பரே.

(220)
   

488.

புலவறாம லிடந்தொறுஞ்செறி
      புரைகடுற்றமு கத்தினை
நிலவறாம லெழுந்தசந்திரன்
      நிகர்க்குமென்பவர் நீசரே.

(221)
   

489.

துளைபடுங்கள மதனைமுத்தணி
      சுரிமுகப்பணி லம்பசும்
கிளைபடுங்கமு கென்பர்மாய
      கிலேசமேவுமி லேசரே.

(222)
   

490.

தோல்பொருந்திய தடியைநல்லதொர்
      தூயவேயிணை சொல்வரே
மால்பொருந்திய நெஞ்சராகி
      மயங்குவார்சிலர் மனிதரே.

(223)

484. புரை என்றது மூக்கை. மால் - மயக்கம்.

485. வாய்விளிம்பென்றது இதழை ;  “எச்சிறங்கு வாய்விளிம்பு பவளமென்பர்.” பிரபோத. நிருபகாதியர். 11.

486. “தரளமென்ப...... பழுதுறும்பல் லென்பை யின்ன பகர்வதென்ன பாவமே. ’ பிரபோத. நிருபகாதியர். 10.