பக்கம் எண் :

8. கூளி கூறியது 75

491.

தசைநிரம்பி யெழும்புடைப்பிரு
      சயிலமென்பர் சழக்கரே
நசைநிரம்பி யனங்கனுக்குளம்
      நைந்துநொந்தற நலிவரே.

(224)
 

வேறு

492.

சிறுமைபுரி சேயிழையார் சிங்காரங் களுமொன்றா
மறுமைபுரி மாதவரு மதிப்பரோ மதியாரால்.

(225)
   

493.

சல்லாபம் பெற்றபெருந் தனிநடையார் தடமுலையார்
உல்லாச நடையினையு மொன்றாகக் கொள்வாரோ.

(226)
  

494.

மெய்யாய வுரைபயில்வார் விளங்கிழையார் விளம்புகின்ற
பொய்யாய வுரையையுமோர் பொருளாகப் போற்றுவரோ.

(227)
  

495.

முற்றின்ப முற்றிருக்கு முனீந்திரரு மொய்குழலார்
சிற்றின்ப மற்றதுமோர் சிறப்பாகச் செறிவாரோ.

(228)
  

496.

இயலாய நோக்கினையே யெய்தினோ ரேந்திழையார்
மயலாய நோக்கினையு மற்றொன்றா மதிப்பாரோ.

(229)
  

497.

ஓங்குகொடி மதவேளுக் குறுமீனம் படைமடவார்
தாங்குகொடி வாய்மைபடை தயிரியமென் சக்கிரமால்.

(230)
  

498.

தையலா ருடற்பாவை தானொன்றிற் படும்படவே
மையலார் வேளுயிரு மாளுமொரு நொடிவரையின்.

(231)
 

வேறு

499.

இனைய வண்ண நிருபகன் கைதொழு
      திறைவன் பாத மிறைஞ்சி யுரைத்தலும்
அனைய வண்ணம் பொறையன் முதல்வன
      தடிவ ணங்கி யறிய விளம்புவான்.

(232)
 

பொறையன் கூற்று

 

வேறு

 

500.

தீதுறுநா வுடையார்கள் சீறுவரே லவர்களுடன்
வாய்திறவா திருந்துவிடு மதுவன்றோ வன்பாதல்.

(233)

497. மதவேளுக்குக் கொடி மீனம் என்க.

498. படும் - அழியும். “பூவைமார்பொடி யாகவேபொடி யாகி வேளு யிர் போகுமே” அஞ்ஞ.

500. “மாசாய நாவுடையார் வாய்திறந்தா லவர்களுடன், பேசாம லிருந்துவிடு மஃதன்றோ பெருந்தகைமை” (அஞ்ஞ. ), “காய்தறு கண்ண