பக்கம் எண் :

8. கூளி கூறியது 77

508.

பேய்விண்டு கேட்டாலும் பெரிதுமுவந் தருள்வதன்றி
வாய்விண்டு கேட்பாரோ மாசற்ற நாவுடையோர்.

(241)
 

 

509.

திருந்தித்தாம் வளனெய்திச் சிறப்புறுமா றெண்ணாரோ
வருந்தித்தா முழந்தாலும் வாராது வாராதால்.

(242)
   

510.

எத்துணையும் போகங்க ளெய்திடினு மாசையுண்டேல்
அத்துணையு மேன்மேலு மவாய்நிற்ப தமையாதால்.

(243)
  

511.

ஆராத பேராசை யற்றவரே மற்றெவர்க்கும்
வாராத பேரின்ப வளனெய்து மாட்சியரால்.

(244)
  

512.

ஏகாத நல்குரவு மின்பமெனக் கொண்டிரக்கப்
போகாத புகழன்றோ புகழினுக்கும் புகழாதல்.

(245)
  

513.

சாம்போது படைத்தபொரு டானெங்கே யிவனெங்கே
போம்போது வெவ்வேறாப் போவதுமப் பொருளேயால்.

(246)
  

514.

ஓதினால் வயிறுள்ள தொருசாணே யொருசாணும்
ஏதினா லமையாதா லெவன்கொலோ வெவன்கொலோ.

(247)
  

515.

நிராசையெனுஞ் சுடர்வாளா னேரெதிர்ந்த வுலோபனைநான்
பராசயமொன் றில்லாமற் பற்றியடல் புரிவேனால்.

(248)
 

வேறு

516.

மாறு கொண்ட வுலோபனை வெல்வகை
      வணங்கி நின்றுசந் தோடன் வகுத்தலும்
வீறு கொண்ட விவகார பராமுகன்
      வெய்ய மோகனமர் வெல்வகை சொல்லுவான்.

(249)

508. “புன்பாவி வாணாள் புலர்ந்தாலு மெய்வெள், ளென்பா யுகுந்தாலு மில்லாமை யென்னும், வன்பாடு நல்லோர்கள் வாய்விண்டு தம்மேல், அன்பாளர் தம்பாலும் அறியச்சொ லாரே” பிரபோத. நிருப. 43.

509. “வருந்தி யழைத்தாலும் வாராத வாரா” (வாக்குண்டாம்); “வருந்தினும் வாராது வாராது தானே” (அஞ்ஞ. ) ; “வாராத தார்தாம் வருந்தினும் வராதே” பிரபோத. நிருப. 41.

512. “இல்லாத பொழுதின்ப மிஃதென்று பிறர்பாற், செல்லாத செல் வென்ப செல்வாய செல்வே” அஞ்ஞ.

514. “வாதாகி நுகர்கின்ற வயிறுள்ள தொறுசாண், ஏதாலி தமை யாதி தென்னேயி தென்னே” (அஞ்ஞ. ); “அண்டாத பேராவ லமையாத தென்னே, விண்டாவு மலைபோல வேண்டுங்கொல் வெண்சோ, றுண்டாலும் வயிறுள்ள தொருசா ணிதற்கோ, கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே” பிரபோத. நிருப. 44.