| விவகாரபராமுகன் கூற்று | | 517. | அளவி லாதசன னங்க டோறுநம் அளவி லாமல்வரு மன்னையு மத்தனும் பிளவி லாதவரை யொப்பதை யன்றிப் பிறிது முண்டுகொ லாமிது பொழுதினும். | (250) | | | | | 518. | புழுவு திக்கு முடம்பின் மலத்திற் புக்கு டன்புழுவ தொப்பதை யன்றி வழுவு திக்கு முடம்பினை யொப்ப வந்து தித்த புழுக்களும் வேறோ. | (251) | | | | 519. | இன்னு மேதிலர்கண் முன்னும தொப்பார் இரண்டு நாளையிடை வாழ்பவ ரன்றோ அன்னை தாதைமனை யன்புறு மைந்தர் ஆதி யாயகிளை யாவையு மன்றே. | (252) | | | | | 520. | சுற்ற முற்றுமொரு கொள்ளி கொளுத்தித் தூர நின்றகல்வ ராருற வாவார் சற்று முற்றவுட லும்முத வாதாற் றாம லாமலுற வேது தமக்கே. | (253) | | | | | 521. | அலைய டங்கவினி யாடுது மென்னா ஆழி யின்கரை யணைந்தவ ரொப்பார் நிலைய டங்கமனை வாழ்வி லிருந்தே நீத்து நாமென நினைத்துழல் வாரே. | (254) |
517. “அத்தனொ டன்னைக் கன்புசெய் கின்றா ரளவில் பிறப்புற் றவையவை தோறும், எத்தனை தாயுந் தந்தையு முற்றா ரித்தனை யன்றோ விவர்களு மிங்கே”(அஞ்ஞ. ) ; “அன்புற்று மாதாபி தாவென்னு மவர்தாம், முன்பெற்ற சென்மங்கள் முடிவில்லை யவைதோ, றின்புற்ற தாய் தந்தை யெங்கேய தன்றோ, பின்பெற்ற பேரும் பெறத்தக்க பேறே” பிரபோத. நிருப. 48. 518. புழுக்களென்றது குழந்தைகளை; “சால வுதிக்கும் புழுவுட றன்னில் தகவின் மலத்தோ டொழுகு முடம்பே, போல வுதிக்கும் புழுவினை யென்னே புத்திர னென்றே புந்திசெய் வாரே” (அஞ்ஞ. ); “சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ, டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே, உடன்மீதிவ் வுடல்போ லுதிக்கின்ற புழுவைத், திடமான மகவென்று சீராட்ட லென்னே” பிரபோத. நிருப. 50. 520. “தம்முற வாவார் தாமல தின்றே” (அஞ்ஞ. ); “தாமேயல் லாதெவர் தமக்குரியர் தாமே” பிரபோத. நிருப. 49. 521. நீத்தும் - துறப்போம். நாலடி. 332. |