522. | ஒருங்கி யாவினையும் விட்டவர் விட்டார் ஒன்று விட்டிலரும் விட்டில ரோடி மருங்கு மல்கிவரு சைவல மொப்ப வந்து மூடிவிடும் வழியது வாக. | (255) |
| | | |
523. | உறவ தாகுமிழி பந்தம தோடே உற்ற பந்தமவை யெத்துணை யேனும் துறவ தாகும்யம தண்டமெ டுத்தே துகள்ப டும்படி தகர்த்தடல் வேனால். | (256) |
| | வேறு | |
524. | பரவியெதிர் விவகார பராமுகனார் பகருதலும் பகரொ ணாத வரகுணனா கியசாந்தன் வாய்புதைத்துத் தனதாண்மை வகுப்ப னேயால். | (257) |
| | சாந்தன் கூற்று |
525. | குலனில்லேன் வலனில்லேன் புகழில்லேன் மேலாய குணனு மில்லேன் புலனில்லே னலனில்லே னெனப்பணிந்து மதத்தன்வலி போக்கு வேனால். | (258) |
| | |
526. | அறம்புரியே னறந்திறம்பா வரும்பொருளீட் டிலன்காதல் அமைந்த காமத் திறம்புரியேன் வீடில்லே னெனத்தாழ்ந்து மதத்தனுரை செகுப்ப னேயால். | (259) |
| | |
527. | தவம்புரியே னிரப்பவர்க்கொன் றேதேனு மளித்தறியேன் சார்பு மில்லேன் அவம்புரிவே னலனல்லே னெனவடங்கி மதத்தனடல் அழிப்ப னேயால். | (260) |
| | |
528. | பொல்லாரோ டிணங்கவல்லேன் போவதுவு மாவதுவும் புத்தி செய்யேன் நல்லாரோ டிணங்குகிலே னெனத்தாழ மதத்தனடு நடுங்கு வானால். | (261) |
522. சைவலம் - நீர்ப்பாசி.
525. வலன் - வெற்றி. புலன் - அறிவு.
527. சார்பு - பெரியார் துணை.