பக்கம் எண் :

80 பாசவதைப் பரணி

529.

புன்மைக்கே நனிபெரியேன் பொறிவழிபோ யறிவழிந்து
      புலம்பு கூர்வேன்
நன்மைக்கே நனிசிறியே னெனத்தாழ்ந்து மதத்தன்வலி
      நலிவ னேயால்.

(262)
   

530.

நான்பெரியே னென்போன்முன் னான்பெரியே னென்னாது
      நல்லோய் நீயே
தான்பெரிய னான்சிறியே னெனக்குழைந்து மதத்தனொடு
      தாக்கு வேனால்.

(263)
  

531.

புழுவிற்குங் குணநான்கே யெனக்குமஃ தென்றாலும்
      புரியும் பொல்லா
வழுவிற்குப் புழுவொவ்வா யான்பெரிய னெனமதத்தன்
      வலிநில் லாவால்.

(264)
   

532.

வணங்குவரி சிலைவாளி தைக்குமெனும் வழக்காலிவ்
      வையந் தன்னில்
வணங்குமஃ தியாவதென வணங்குவதன் றோநன்கு
      மதிப்பே யாதல்.

(265)
   

533.

ஆழ்வதரு மணிமிதப்ப தாழியிடைத் துரும்புதுலை
      அதனிற் பெய்யத்
தாழ்வதுயர் வதுவென்னத் தாழ்வதன்றோ வெனதுபெருந்
      தலைமை யாதல்.

(266)
   

534.

எல்லவர்க்கு மொப்பதன்றே யென்றாலும் பணிவாதல்
      இருமைத் தாய
செல்வருக்கே மேலுமொரு செல்வமெனச் செல்வதன்றோ
      செல்வ மாதல்.

(267)

529. புலம்பு - வருத்தம்.

530. பி - ம். ‘என்போர்முன்’.

531. வழுவிற்கு யான் பெரியன் என்க, “புழுவுக்குங் குணநான் கெனக் கும்மதே, புழுவிற்கிங் கெனக்குள்ள பொல்லாங் கில்லை, புழுவினுங் கடையேன் புனிதன்றமர், குழுவுக் கெவ்விடத்தேன் சென்று கூடவே” தே.

532. வணங்கு - வளையும்.

533. ஆழியிடை அருமணி ஆழ்வது; துரும்பு மிதப்பது. “வலி தன்றோ தாழுந் துலைக்கு” நீதிநெறி.

534. “எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளும், செல்வர்க்கே செல்வந் தகைத்து” குறள்.