பக்கம் எண் :

8. கூளி கூறியது 81

 

வேறு

 

535.

சாந்தனடி பணிந்தினைய வாறு கூறத்
      தம்பிரா னிருசரணந் தலைமேற் கொண்டு
போந்தமுத சீலனார் மகிழ்ந்து தாஞ்செய்
      பொருபோரின் றிறமனைத்தும் புகல்கின் றாரால்.

(268)
 

அமுதசீலன் கூற்று

 

வேறு

536.

தன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுபோலத் தராதலத்து
மன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுவன்றோ வாழ்வாதல்.

(269)
   

537.

தன்னாக்கந் தனக்குவகை தலைவருமேற் பிறன்மாட்டு
மன்னாக்கந் தனக்குவகை வாராத வகையெவனால்.

(270)
  

538.

அறிவாக்க முருவாதி யயலார்த மிடைக்காணிற்
பிறவாக்கம் வேண்டுவரோ வதுதமதாப் பெட்டுயர்வர்.

(271)
  

539.

நான்பெற்ற பேறுலகம் பெறுகென்பார் நலனயலார்
ஏன்பெற்று வாழ்வரென விகலுமா றெவ்வாறால்.

(272)
  

540.

எல்லாருந் தமைப்போல்க வென்பார்முன் னிகலேற்றுப்
பொல்லாத மாற்சரியன் போர்புரித லெவ்வாறால்.

(273)
 

வேறு

541.

இன்ன தன்மையின வெந்தைபி ரான்முன்
      எய்தி வம்மர்பல ரெத்தனை கோடி
அன்ன தன்மையினி லோதுத லோடும்
      ஐய னும்மக மகிழ்ந்தன னன்றே.

(274)
  

542.

இந்த வண்ணமியன் ஞானவி னோதன்
      ஏற்ற மிக்கபடை யாவு மிறைஞ்சித்
தந்தம் வென்றிதழு வுந்தொழி றம்மிற்
      றாழ்வி லாதவகை சாற்றுத லோடும்.

(275)

536. “எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே, அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” தாயுமானவர் பாடல்.

538. பெட்டு - விரும்பி.

539. “நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்” திருமந்திரம்.

540. இகல் ஏற்று - பகையை மேற்கொண்டு. மாற்சரியன் - பொறாமை. “எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணி யிரங்கவுநின், தெய்வ வருட்கருணை செய்யாய் பராபரமே” தாயுமானவர் பாடல்.

541. பி - ம். ‘மகிழ்ந்தன னன்றோ’