| ஞானவினோதன் போர்க் கேகல் | | 543. | தானை கண்டருளி யின்புறு காலைத் தலைவ ணங்கிவிடை கொண்டறி வில்லான் சேனை யொன்றொழிய வெல்லுது மென்னாத் திண்மை யோடுமெதிர் சென்றன னன்றே. | (276) | | | ஞானவினோதன் படையின் செயல் | | | | வேறு | | 544. | மறைகளே வாசியா வாய்மையே பாகனா மன்னு தத்வத் துறைகளே தேர்களா வேறினர் சூடினார் துணைவர் தாளே. | (277) | | | | 545. | போதகம் போதகம் தேர்வகை தேர்வகை புன்மை யுற்ற சாதகந் தீர்வகை வாசியே வாசியார் தம்மை யொப்பார். | (278) | | | | | 546. | பிறிவிலா னானைதேர் புரவிகா லாளிவை பெரிது மெய்தி அறிவிலா னமருமா யாபுரங் குறுகிநின் றார்த்த வன்றே. | (279) | | | | | 547. | வரவொடு போக்கிலா வகையினாற் சூழ்கென மாசில் சேனை விரைவொடு வஞ்சகன் வாழுமா யாபுரம் விரவ முற்றும். | (280) | | | வாயில் காவலர் அறிவித்தல் | | | | வேறு | | 548. | பெற்றமூரு மவனலன் பிரமனல்லன் மாலலன் மற்றைமூவர் மூலமே வந்ததென்ன வாயிலோர். | (281) |
543. அறிவில்லான் - அஞ்ஞனது. 544. வாசி - குதிரை. “வித்தக வேதங்க ளேவாசி யாவே மெய்த்திற னேநின்ற வோர்பாக னாவே, தத்துவ மாகின்ற தேரேறி னாரே தற்சொரு பானந்தர் தாள்சூடி னாரே” அஞ்ஞ. 545. போதகம் - ஞானம், யானை. தேர்வகை - விசாரம். தேரினது வகைகள். வாசி - வாசியோகம், குதிரை. தம்மை யார் ஒப்பாரென்க. “வாசியி லாவாசி யேவாசி தானாம், போதமே போதக மாந்தேர்வு தேர்தாம் போல்பவ ரேவீர ரேதோது மாறே” அஞ்ஞ. |