| | வேறு | | 549. | அகம்புகுந் தடங்கவே யடங்கலும் மவதியே சகம்புகுந்த வென்றுகண்டு தம்முளே யடங்கவே. | (282) | | | | | 550. | எங்குமாய் நிறைந்துநின்ற விறைவனேயொர் வடிவெடுத் திங்குமேவு கின்றன னென்றுசொல்லு மெல்லையே. | (283) | | | அஞ்ஞன் படைவீரர் கூற்று | | 551. | ஏகதேசி யாகவே யெங்குமாய் நிறைந்தவர் போகவந்த வேதுவேது புகல்கவென்பர் சிலர்களே. | (284) | | | | 552. | அருவமென்ற வீசனா ரகன்புவிக்க ணெய்தவந் துருவமெய்து மாறுநன்று நன்றெனா வுரைப்பரே. | (285) | | | வேறு | 553. | அறிவி லன்புர மழிந்ததினி யென்றுமொழிவார் அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார் செறியு நந்தவ முடிந்ததினி யென்றுதெளிவார் தெரிய வுஞ்சமய மொன்றுமிலை யென்று திரிவார். | (286) | | | | 554. | ஒன்றி யெங்குமுற நின்றபொரு ளின்றுபடிமேல் உருவெ டுத்துவரு கின்றதென வுற்றுமொழிவார் வென்றி கொண்டணைய விங்குவரு கின்றவிரகோ மிகவு நன்றென வியந்துநகை கொண்டுதொழுவார். | (287) | | | | 555. | குலம டங்கலு முடிந்தது முடிந்ததெனவே குடிகெ டும்படி புகுந்ததறி வென்று குலைவார் சொலமு டிந்திறுவ தொன்றென மொழிந்தகணியார் சொலவு மின்றுதலை வந்ததென நின்றுசுழல்வார். | (288) |
551. பி - ம். ‘போகம் வந்த’ 553. துழனி - ஆரவாரம். “சமய மென்பனவு மொன்றுமில தென்று மொழிவார் தவமுடிந்தது முடிந்ததென நின்றுசமைவார், அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார் அறிவி லன்புர மழிந்ததினி யென்றயருவார்” அஞ்ஞ. 554. விரகு - தந்திரம். “மருவி யெங்குமுற நின்றபொரு ளின்றுபுவி மேல் வடிவு கொண்டுவரு கின்றதென நின்றுமொழிவார், அருவ மென்று மொழி கின்றபொரு ளிங்குவருதற் கடிமை யென்றுசிலர் நின்றுநகை கொண்டுவிடுவார். “ அஞ்ஞ. 555. “குடிகெ டும்படி புகுந்ததுணர் வென்றுதளர்வார் குலம டங்கலு முடிந்ததென நின்றுகுலைவார், முடிவில் வந்துறுவ தொன்றென மொழிந்தகணியார் மொழியு மின்றுதலை வந்ததென நின்றுகுலைவார்” அஞ்ஞ. |