563. | மாறுகெட வாகையுட னென்னையட வந்தவனை வந்தெதிர் கலந்தவுடனான் வீறுகெட மீளினெனை யஞ்ஞபதி யென்றழையல் வேறுபெய ரிட்டழையுமே. | (296) | | | | | 564. | இன்னவகை கூறிமத னாதிபடை யத்தனையும் ஏவியிறை வன்படையுடன் அன்னவகை போர்புரிக வென்னவறி வன்படையொ டஞ்ஞபதி படைபொருததே. | (297) | | | அஞ்ஞன்படை அஞ்சுதல் | | | | வேறு | | 565. | கடாவிடை யாகிய தேர்வகை காண்டலும் கடாவிடை யாகிய தேர்வகை கண்டில. | (298) | | | | 566. | புலனெனப் பெயரிய போதகந் தோன்றலும் புலனெனப் பெயரிய போதகந் தோன்றில. | (299) | | | | 567. | கதிசேர் கரணக் கடும்பரி பாய்தலும் கதிசேர் கரணக் கடும்பரி பாய்ந்தில. | (300) | | | வேறு | 568. | அஞ்சாம லறிவன் படைத்தானை காண அஞ்ஞன் படைத்தானை யணியாக வெழுமே எஞ்சாம லீராறு ரவியும் புகுந்தால் இரியாம லிருண்முற்று மெதிர்நிற்கு மன்றே. | (301) |
563. “ஆண்டகைய னாகினெனை யஞ்சுத லொழித்துவரு மவனை யெதிர் கண்டளவில்யான், மீண்டிடுவ னாகினெனை யஞ்ஞவர சென்றழையல் வேறுபெய ரிட்டழையுமே” அஞ்ஞ. 565. கடாவிடையாகிய தேர்வகை - கடாவும் விடையுமாகிய விசார வகைகள், கடாவுகின்ற நடுவிலுள்ளனனவாகிய தேர்களின் வகைகள். 566. புலன் - அறிவு, தன்மாத்திரை. போதகம் - ஞானம், யானை. 567. கதி - நற்கதி, நடை. கரணம் - யோககரணங்கள், ஆடல் வகை. 568. “அறிவின் பெருஞ்சேனை கண்காண வெதிரே அஞ்ஞன் கொடுஞ்சேனை யஞ்சாம லெழவோ, எறிவெங் கதிர்ச்செல்வ ரெத்திக்கு மெழவே இரியாம லிருணிற்கி னிதுநிற்கு மெதிரே” அஞ்ஞ. |