பக்கம் எண் :

86 பாசவதைப் பரணி

 

ஞானவினோதன் போர்புரியக் கட்டளையிடல்

 

 

வேறு

 

569.

தீக்கு நின்றவம ரஞ்சி யோடுவது
      செய்க லாததிறல் வீரரை
மாய்க்கு கென்றருள வீரர்வீரனை
      வணங்கி மற்றிது வகுப்பரால்.

(302)
 

ஞானவினோதன் படைவீரர் அவனை வினாவுதல்

 
 

வேறு

570.

பாச ராசனார் படையு நம்பெரும்
      படையும் வேறறி பரிசு பான்மையிற்
பேசு வீரெனா வறிவு றுந்திறம்
      பெரிய வன்பினிற் பேசு வானரோ.

(303)
 

ஞானவினோதன் தன்படைக்கும் அஞ்ஞன் படைக்கும் உள்ள வேற்றுமை கூறல்

571.

மாதர் பூண்முலை மருவி வாழிலென்
      மன்னு மெய்த்தவ வடிவு பூணிலென்
கோதில் வாய்மையைக் கண்ட தூயவர்
      கொண்ட கொள்கையே கொள்கை யாகுமால்.

(304).

     

572.

தேறு மோனமா ஞான போதனார்
      செய்த செய்கையே செய்யு மாதவம்
கூறும் வாசகம் யாவு மந்திரம்
      கொண்ட கோலமே கோல மாகுமால்.

(305)
 

வேறு

 

573.

நன்றிதுதீ திதுவென்று ணாடார்க ணவையிலோர்
      நவையு ளாரும்
நன்றிதுதீ திதுவென்று ணாடார் ளாயினுந்தான்
      நாடின் வேறால்.

(306)

570. பி - ம். ‘பெய்யு மன்பினில்’

571. “விண்டிருந்தென்மெய் கண்டுளோர்தவ வேடமேவியென் கோடி மாதரைக், கொண்டிருந்தெனவர் செய்ததேதவங் கொண்டகொண்டதே கோல மாகுமால்” அஞ்ஞ.

573. தான் : அசைநிலை