பக்கம் எண் :

8. கூளி கூறியது 87

574.

குற்றமிது குணமிதெனக் குறியார்கள் குறியுடையார்
      குறியி லாரும்
குற்றமிது குணமிதெனக் குறியார்க ளாயினுந்தான்
      குறிப்பின் வேறால்.

(307)
   

575.

அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளறிவுடையார்
      அறிவி லாரும்
அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளாயினுந்தான்
      அறியின் வேறால்.

(308)
   

576.

வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியார் மேலானோர்
      மேலல் லாரும்
வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியா ராயினுந்தான்
      வேறு வேறால்.

(309)
  

577.

விலக்கீது விதியீது வெனத்தெளியார் மேலானோர்
      மெய்யி லாரும்
விலக்கீது விதியீது வெனத்தெளியா ராயினுந்தான்
      வேறு வேறால்.

(310)
 

வேறு

578.

பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும்
      பாரார்கள் பயன்றெரிவார் பயனி லாரும்
பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும்
      பாரார்க ளாயினுந்தான் பார்க்கின் வேறால்.

(311)
  

579.

தேசமிது காலமிது வென்றங் கொன்றும்
      தேரார்க டேர்ந்துள்ளார் தேர்வி லாரும்
தேசமிது காலமிது வென்றங் கொன்றும்
      தேரார்க ளாயினுந்தான் றேரின் வேறால்.

(312)
  

580.

ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும்
      ஆயார்க ளாய்ந்துளோ ராய்வி லாரும்
ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும்
      ஆயார்க ளாயினுந்தா னாயின் வேறால்.

(313)
  

581.

மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும்
      வினவார்கள் விளைவுணர்ந்தோர் விளைவி லாரும்
மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும்
      வினவார்க ளாயினுந்தான் வினவின் வேறால்.

(314)

581. பி - ம். ‘வினையுணர்ந்தோர் வினையிலாரும்’